குட்டையில் சடலமாக கிடந்த மாணவன்-மதுரையில் அதிர்ச்சி..!

Update: 2023-04-16 14:39 GMT
  • மதுரையில், காணாமல் போன பள்ளி மாணவன், தண்ணீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
  • மதுரை விக்கிரமங்கலம் அடுத்துள்ள அரசமரத்துப்பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் விஷ்ணு, 6ம் வகுப்பு பயின்று வந்தான்.
  • விஷ்ணுவை காணவில்லை என உறவினர்கள் தேடி வந்தனர்.
  • இந்நிலையில், பாண்டி என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் குட்டையில் சிறுவன் சடலமாக மிதந்ததாக கூறப்படுகிறது.
  • சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்