பைக் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து..தந்தை - மகள் சம்பவ இடத்திலேயே பலி..

Update: 2023-05-07 02:22 GMT

மன்னார்குடி அருகே வடபாதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர், தனது மகள் மதுமதி மற்றும் ஒன்றரை வயது பேத்தி தமிழ் இனியாவுடன், இருசக்கர வாகனத்தில் திருவாரூருக்கு சென்று கொண்டிருந்தார். திருவாரூரில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த அரசு பேருந்து, இவர்கள் சென்ற மோட்டார் பைக் மீது மோதியது. இதில், மீனாட்சி சுந்தரம், மதுமதி ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த குழந்தை தமிழ் இனியாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மற்ற இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்