நெருங்கி பழகிய தோழனை வீட்டுக்கு.. வரவழைத்து விஷ ஜூஸ் கொடுத்த தோழி?பெற்றோர் வரன் தேடியதால் விபரீதமா?

Update: 2022-10-29 05:04 GMT

கேரளா மாநிலம் பாறசாலை பகுதியை சேர்ந்தவர் சாரோன்ராஜ். இவர் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார். இவர் தினமும் கல்லூரிக்கு செல்லும் போது காரக்கோணம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வீட்டில் வரன் பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதனிடையே கடந்த 17ஆம் தேதி தோழியின் அழைப்பை ஏற்று சாரோன் ராஜ் தன் நண்பர் ரெஜினுடன் தோழியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சாரோன் ராஜூக்கு அந்த பெண் குளிர்பானம் கொடுத்ததாக கூறப்படுகிறது. குடித்த சற்று நேரத்திலேயே உடலில் மாற்றங்கள் தெரியவே உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த பெண் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என குற்றச்சாட்டு முன்வைக்கும் சாரோன்ராஜ் உறவினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்