பெண் பேராசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை..உடந்தையாக இருந்த மாணவர்கள்

Update: 2023-04-21 11:06 GMT

உசிலம்பட்டி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், உதவி பேராசிரியருக்கு ஆதரவாக இருந்ததாக, மேலும் ஒரு மாணவனை போலீசார் கைது செய்தனர்.

உசிலம்பட்டியை அடுத்த கருமாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக உதவி பேராசிரியர் ஜெகன் கருப்பையாவை செக்காணூரணி போலிசார் கடந்த 13-ஆம் தேதி கைது செய்தனர். இதுதொடர்பாக கல்லூரியில் விசாரணை நடத்தியபோது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிகளுக்கும், பெண் பேராசிரியர்களுக்கும் ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் ஞானசேகரன் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு உதவி பேராசிரியர் ஸ்டாலின், மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவன் கருப்பசாமி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். அவர்களில் மாணவர் கருப்பசாமியை கடந்த 14-ஆம் தேதி போலிசார் கைது செய்தனர். வழக்கை மேற்கொண்டு விசாரித்தபோது, இளையான்குடியைச் சேர்ந்த பிலிப் ஜாய்ஸ்டன் என்ற மாணவனுக்குத் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவரையும் போலிசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்