"ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவும்" - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Update: 2023-01-02 07:09 GMT

கொரோனா பரவலின்போது பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கொரோனா தொற்றின்போது தன்னலம் கருதாது, தங்கள் உயிரை துச்சமென மதித்து ஒப்பந்த செவிலியர்கள் பணியாற்றியதாகக் கூறி உள்ளார்.

இப்படிப் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் திமுக அரசு நட்டாற்றில் விட்டிருப்பதாக அவர் விமர்சித்து உள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக திமுக அரசு நடந்துகொள்வதாக கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்ற அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளா

Tags:    

மேலும் செய்திகள்