சென்னையை சேர்ந்த மனநல சிகிச்சை நிபுணரான பிளாரன்ஸ் நளினி என்பவர், அமெரிக்காவில் நடைபெற்ற மிஸஸ் உலக அழகி போட்டியில் கலந்து கொண்டார்.
இதில் வெற்றி பெற்று பதக்கம் வென்ற நிலையில், பிளாரன்ஸ் நளினி சென்னை திரும்பினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக் அழகிப் போட்டிகளிலும் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
மேலும் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் மிஸஸ் இன்டர்நேஷனல் போட்டியிலும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.