மருத்துவமனையில் அனுமதித்த கர்ப்பிணி உயிரிழப்பு - தவறான சிகிச்சையே காரணம் - உறவினர்கள் குற்றச்சாட்டு

Update: 2022-12-12 02:12 GMT

ஓசூரைச் சேர்ந்த அஸ்வினி என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பிரசவத்திற்காக, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது, உயர் ரத்த அழுத்தம் காரணமாக மயங்கிய அஸ்வினிக்கு, மருத்துவர்கள் மயக்க ஊசி போட்டுள்ளனர்.

ஊசி போட்ட சிறிது நேரத்தில் அஸ்வினி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தையை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினர்.

இதனிடையே, அஸ்வினியின் உயிரிழப்புக்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவ பணிகள் மற்றும் சுகாதார துணை இயக்குனர் உத்தரவின் பேரில், குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்