ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகரில் தோண்டத் தோண்ட சடலங்கள்- உக்ரைன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Update: 2022-10-08 17:23 GMT

ரஷ்ய படைகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட உக்ரைன் பகுதியில் தோண்டத் தோண்ட ஏராளமான கல்லறைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக உக்ரைனிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் லிமன் நகரம் மீண்டும் உக்ரைன் வசம் வந்தது. அங்கு கிட்டத்தட்ட 180 பேரின் உடல்கள் அடங்கிய மிகப்பெரிய கல்லறை கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் இதே போன்று இசியம் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழியில் 436 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது லிமனிலும் அதே போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்