பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு.. தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

Update: 2023-01-10 09:41 GMT

பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு.. தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. 


பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 2021 - 22ம் ஆண்டு, இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட, குளிர் பருவ பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக, சுமார் இரண்டு லட்சத்து இரண்டு ஆயிரம் விவசாயிகளுக்கு 284 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. அதேபோல, 2022 - 23ம் ஆண்டிற்கு விதைப்பு பொய்த்தல் இனத்தின் கீழ், சுமார் 19 ஆயிரத்து 282 விவசாயிகளுக்கு, 34 கோடியே 30 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மொத்தத்தில் 2 லட்சத்து 21 ஆயிரம் விவசாயிகளுக்கு, 318 கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. இதனிடையே, இப்பணியினை தலைமைச் செயலகத்தில் இருந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐந்து விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளை வழங்கி, தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்