அவரோட கூட்டணியா?...தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் - கே.எஸ். அழகிரி சூசகம்

Update: 2022-12-29 02:29 GMT

கமல்ஹாசனுடன் தமிழகத்தில் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, தேர்தல் வரும் போது யார் யாருடன் கூட்டணி என அறிவிப்போம் என்று கே.எஸ்.

அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை சத்திய மூர்த்தி பவனில் கக்கனின் மார்பளவு சிலை திறந்து வைக்கும் நிகழ்வில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.

அழகிரி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில், ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டதை குறிப்பிட்டு, கமல்ஹாசனுடன் தமிழகத்தில் கூட்டணி அமைக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், தேர்தல் வரும் போது யார் யாருடன் கூட்டணி வைப்போம் என அறிவிப்பதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்