கத்தியோடு உள்ளே புகுந்த மர்ம நபர்கள்... பதறிப்போன கலெக்டரின் பெற்றோர் -திருப்பூரில் பரபரப்பு சம்பவம்

Update: 2023-02-03 02:30 GMT

தர்மபுரி மாவட்ட ஆட்சியரின் பெற்றோர் வீட்டில் மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தியின் பெற்றோர் திருப்பூர் மாவட்டம் லூர்துபுரத்தில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி, 7 சவரன் நகை, 7 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த சேயூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்