"கழுத்தை நெரிக்க வேண்டாம்" - சீமானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த முதல்வர்

Update: 2023-06-01 07:32 GMT

சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு இருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம் என்றும், கழுத்தை நெரிப்பது அறம் அல்ல என்றும் கூறி உள்ளார். டுவிட்டர் முடக்கத்தை விலக்கி, சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்