"நம்பிக்கைக்கு பலனாக கிடைத்த துரோகம்"... நண்பர்களே அரங்கேற்றிய மெகா மோசடி - அதிர வைக்கும் பின்னணி...

Update: 2023-01-15 14:50 GMT

சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த ராகேஷ், பழைய நகைகளை வாங்கி விற்கும் வியாபாரி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரிகளான மரிய மைக்கேல் என்பவரிடம் 870 கிராம், முகமது பரூக்கிடம் 480 கிராம் என மொத்தம் ஆயிரத்து 350 கிராம் தங்கத் தகடுகளை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாங்கியுள்ளார். அதனை ராஜஸ்தானில் வசிக்கும் தனது பங்குதாரர் கமலேஷுடம் கொடுத்து, பணம் பெற்றுத் தருவதாக கூறியுள்ளார். இதனிடையே, கமலேஷ் அனுப்பியதாகக் கூறி ராகேஷிடம் இருந்து, தங்கத் தகடுகளை ஒருவர் வாங்கிச் சென்ற நிலையில், அதன் பின்னர் எந்த தகவலும் இல்லை.

Tags:    

மேலும் செய்திகள்