டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்து உள்ளார். ஆஸ்திரேலியா உடன் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது தொடர்பாக பேசியுள்ள ரோகித் சர்மா, குறைந்தபட்சம் 20 முதல் 25 நாட்களாவது இறுதிப் போட்டிக்கு பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று கூறினார். இறுதிப்போட்டியை குறைந்தது 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் நன்றாக இருக்கும் என்றும் ரோகித் தெரிவித்தார்.