பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வான நிலையில் அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகி இருப்பது நம்ப முடியாத மைல்கல் எனக் கூறியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் உட்பட 200 பேரால் பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எல்லைகளை தகர்த்தெறிந்து அவர் சாதித்திருப்பதாக ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்தார்.