பெண்கள் பள்ளி கழிப்பறையில் போட்டோ எடுத்தார்களா ஒடிசா இளைஞர்கள்? - மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டு

Update: 2022-12-04 08:33 GMT

நங்கநல்லூர் பெண்கள் பள்ளி கழிப்பறையில் போட்டோ எடுக்கப்பட்டதா என ஒடிசா இளைஞர்களிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, நங்கநல்லூரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள கழிப்பறையை மாணவிகள் பயன்படுத்தும் போது, அருகில் புதிய கட்டடப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் புகைப்படம் எடுப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இதையடுத்து, கட்டடப் பணியில் இருந்த இரண்டு ஒடிசா மாநில இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த இளைஞர்கள் புகைப்படம் எடுக்கவில்லை எனக் கூறியதையடுத்து, அவர்களின் செல்போன்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்