50 அடி கிணற்றில் சிறுவன் அழுகுரல்... உயிருக்கே வினையாகவிருத்த 'தாகம்' - கடைசியில் நடந்த அதிசயம்

Update: 2023-06-10 06:44 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய 12 வயது சிறுவனை, தீயணைப்புத் துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர். குருக்கள்பட்டி கிராமத்தில் மகாராஜா என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தண்ணீர் குடிப்பதற்காக, இறங்கிய போது கால் இடறி கிணற்றுக்குள் விழுந்தார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவனை கயிறு கட்டி உள்ளே இறங்கி பத்திரமாக மீட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்