4 நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் நியமனம்...குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு

Update: 2023-07-20 03:14 GMT

குஜராத், கேரளா, தெலங்கானா, ஒடிசா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நீதிபதி ஆலோக் ஆராதே தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், சுபாஷிஷ் தல்பாத்ரா ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதி சுனிதா அகர்வாலை குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ஆஷிஷ் ஜீதேந்திரா தேசாயை கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்