கடலுக்குள் இலங்கை மீனவர்கள் செய்த செயல்

Update: 2024-03-04 02:25 GMT

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து, இலங்கை கடல் எல்லையில் யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள், தொழிலாளர்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். வடமராட்சியிலிருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட படகுகளில் கடலில் இறங்கி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம், இலங்கை கடல் எல்லையை கடந்து சர்வதேச கடல் எல்லையில் போராட்டம் நடத்த இலங்கை கடற்படை எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்