எண்ணெய்க் குழாய் வெடித்து கடலில் கசிந்த 50,000 லிட்டர் எண்ணெய்

தாய்லாந்தில் எண்ணெய்க் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பால், கடற்கரைப் பகுதிகள் முழுவதும் எண்ணெய் படர்ந்து காணப்படுகின்றன.

Update: 2022-01-30 08:40 GMT
தாய்லாந்தில் எண்ணெய்க் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பால், கடற்கரைப் பகுதிகள் முழுவதும் எண்ணெய் படர்ந்து காணப்படுகின்றன. ஸ்டார் பெட்ரோலிய நிறுவனத்திற்கு சொந்தமான குழாய் வெடித்ததில், சுமார் 50 ஆயிரம் லிட்டர் எண்ணெய் கடலில் கசிந்தது. இதனால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் நீரும், மணற்பரப்பும் கருப்பு நிறமாக மாறின. இதையடுத்து கசிந்த எண்ணெயை அகற்றும் பணிகளை தாய்லாந்து அரசு துரிதப்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்