பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 15 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 15 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆகப் பதிவானது. இன்று அதிகாலை 3.30 மணி அளவில் ஹர்னாயில் இருந்து வட கிழக்கில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிர்வை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் இறங்கினர். சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.