கொளுந்து விட்டு எரியும் கிரீஸ் காடுகள் - வரலாறு காணாத காட்டுத் தீ
கட்டுக்கடங்காத காட்டுத் தீ தொடர்ந்து 4வது நாளாக கிரீஸ் காடுகளை சாம்பலாக்கி வருகின்றது.
பலத்த காற்று காட்டுத் தீப்பரவலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை அணைக்க கடுமையாகப் போராடி வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு கிரீஸ் கடுமையான வெப்ப அலையால் தாக்கப்பட்டு ஆங்காங்கே பரவலாக காடுகள் தீப்பிடித்து எரியத் துவங்கின. வனப்பகுதிகளுக்கு அருகே வசிக்கும் மக்கள் வீடுகள், உடமைகள் ஆகியவற்றை இழந்தனர். மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.