தடுப்பூசி தேசியவாதத்தை உலக நாடுகள் கடைப்பிடிக்கக்கூடாது - சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் வேண்டுகோள்

சுவீடன் சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், தடுப்பூசி தேசியவாதத்தை உலக நாடுகள் கடைப்பிடிக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-04-20 04:49 GMT
உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கூறி உள்ளார். சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை தொடர்ச்சியாக கடைப்பிடிப்பதன்மூலம், பரவலை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று கூறினார். இந்த கூட்டத்தில் காணொலி மூலம் பங்கேற்ற சுவீடன் சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், தடுப்பூசி தேசியவாதத்தை உலக நாடுகள் கடைப்பிடிக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்தார்
Tags:    

மேலும் செய்திகள்