இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை 2-வது முறையாக பயணம் ரத்து

இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை 2-வது முறையாக பயணம் ரத்து

Update: 2021-04-20 00:00 GMT
இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை 2-வது முறையாக பயணம் ரத்து 
 
இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை, இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டது. ஏப்ரல் இறுதியில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர திட்டமிட்டிருந்தார்.அப்போது, இந்தியா இங்கிலாந்து இடையேயான வர்த்தக தொடர்பான உறவுகளை வலுப்படுத்தவும், வேலைவாய்ப்பு அதிகரிப்பு, முதலீடுகளை ஈர்த்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகள், இந்தச் சந்திப்பில் இடம்பெறும் என கூறப்பட்டது. போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்ற பிறகு, முதன் முறையாக இந்தியா வர இருப்பதாக கூறப்பட்ட நிலையில்,  கொரோனா தொற்று அதிகரித்த காரணத்தால், அவரது 
பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்