மலேசியாவில் உயிருக்கு போராடும் பெண் - விமானத்தில் ஏற்ற மறுப்பு

உடல்நலம் பாதிக்கப்பட்டு மலேசியா, கோலாலம்பூரில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் தனது மனைவியை தஞ்சை மாவட்டத்தில் உள்ள தமது சொந்த ஊருக்கு அழைத்து வர அனுமதி அளிக்க வேண்டுமென சந்திரசேகரன் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-04-19 05:16 GMT
உடல்நலம் பாதிக்கப்பட்டு மலேசியா, கோலாலம்பூரில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் தனது மனைவியை தஞ்சை மாவட்டத்தில் உள்ள தமது சொந்த ஊருக்கு அழைத்து வர அனுமதி அளிக்க வேண்டுமென சந்திரசேகரன் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார். பத்மினி என்கிற 43 வயது பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு கோலாலம்பூரில் இருக்கிறார். மலேசியா அரசும், மருத்துவர்களும் அனுமதி அளித்தும் அவரை விமானத்தில் ஏற்ற "ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்" நிறுவனம் மறுப்பதாக தெரிகிறது. எனவே பத்மினியின் கணவர் சந்திரசேகரன், தனது மனைவியை அழைத்து வர அனுமதி அளிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

Tags:    

மேலும் செய்திகள்