ரசிகர்களை ஈர்க்க தயாராகி வரும் போல்ஷோய் திரையரங்கு

கொரோனா பரவலை தடுக்க பல்வேறு வகையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், திரையரங்குகளில் 50 சதவீத மக்களை அனுமதிக்க ரஷ்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

Update: 2020-09-06 06:07 GMT
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு வகையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், திரையரங்குகளில்  50 சதவீத மக்களை அனுமதிக்க ரஷ்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில், மாஸ்கோவில் உள்ள பிரபல போல்ஷோய் திரையரங்கில், டான் கார்லோ நாடகத்திற்கான இறுதிக்கட்ட ஒத்திகை பணிகள் வெள்ளியன்று நடைபெற்றது. திரையரங்குகள் மூடப்பட்டதால் உரிமையாளர்களும், கலைஞர்களும், மக்களும் பாதிக்கப்பட்ட நிலையில்,  போல்ஷோய் திரையரங்கத்திற்கு மட்டும் 13 மில்லியன் டாலர் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்