மறப்போம் மன்னிப்போம் என கூறுவதா? :இலங்கை பிரதமருக்கு சம்பந்தன் கண்டனம்

போர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்

Update: 2019-02-22 05:41 GMT
மறப்போம் மன்னிப்போம்' என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தை நிராகரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், போர்க் குற்றங்களை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அரசு படைகளின் போர்க்குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதமரின் கருத்தை வரவேற்ற போதிலும், அவரின் 'மறப்போம் மன்னிப்போம்' என்ற கருத்தை அடியோடு நிராகரிப்பதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்