கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண் - அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள்

சீனாவில் ஒரு பெண் தம்மைக் கடித்த பாம்பைக் கையோடு தூக்கிகொண்டு, மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-08-02 10:08 GMT
சீனாவில் ஒரு பெண் தம்மைக் கடித்த பாம்பைக் கையோடு தூக்கிகொண்டு, மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவின்  ஸிஜியாங் மாகாணம்,  புஜிங் கவுண்டியா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 1.5 மீட்டர் நீளமுள்ள பாம்பை, தமது மணிக்கட்டில் சுற்றியபடி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.  இதனை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  அந்த பெண் தம்மை ஒரு பாம்பு கடித்துவிட்டதாகவும், பாம்பை பார்த்தால் அதற்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும் என்பதற்காக அந்த பாம்பை மருத்துவமனைக்கு எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்