"திருடர் Sir.. கொஞ்சம் எந்திரிங்க சார்.." - திருட சென்ற இடத்தில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

Update: 2024-04-18 07:22 GMT

"திருடர் Sir.. கொஞ்சம் எந்திரிங்க சார்.." - திருட சென்ற இடத்தில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

#kannyakumari #thanthitv #theft #Thief

கன்னியாகுமரியில், கொள்ளையடிக்க வந்த வீட்டில் அசந்து தூங்கிய சோம்பேறி திருடனை வீட்டு உரிமையாளர் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு தூத்துக்குடியிலுள்ள தனது மகள் வீட்டிற்கு மனைவியுடன் சென்றுள்ளார்.

தேர்தலில் வாக்களிக்கப்பதற்காக ஊர் திரும்பிய மோகன்தாஸ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது இளைஞர் ஒருவர் பையில் சுத்தியல் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்துக்கொண்டு தூங்கி கொண்டிருந்துள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட மோகன்தாஸ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த இளைஞரை மடக்கிபிடித்து தக்கலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், திருட வந்த இளைஞர் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த சிவசங்கர் என தெரிய வந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்