சரக்கு வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்ட மாணவிகள் - தீயாய் பரவும் காட்சிகள்

Update: 2023-11-09 10:46 GMT

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவிகள் சரக்கு வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அங்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகம் இணைந்து நடத்திய, மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கொடுமுடி உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவிகள் அழைத்து வரப்பட்டனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்து மாணவிகளை சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்