ரத்தம் தெறிக்க தெறிக்க காவலர் மண்டையை உடைத்த நபர்..! மயிலாடுதுறையில் பரபரப்பு சம்பவம் | TN Police

Update: 2023-12-26 03:44 GMT

சீர்காழி அருகே காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர், கட்டையால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ளவர் சீனிவாசன். இவர், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார் குறித்து விசாரிக்க, மேலவரவுகுடி கிராமத்திற்கு சென்றார். அங்கே, அன்புதமிழ்ஜாகர் என்பவரை விசாரித்தார். அப்போது, அன்புதமிழ்ஜாகர் சிறப்பு உதவி ஆய்வாளரை, மறைத்து வைத்திருந்த உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பியோடினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பியோடிய நபருக்கு போலீசார் வலைவீசி உள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்