உரிமையாளர் போட்ட பலே பிளான்.. முதலாளிக்கு விபூதி அடித்த நபர்.. கொத்தாக தூக்கிய போலீஸ்...

Update: 2023-09-05 02:59 GMT

சென்னை அமைந்தகரை பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் சந்திரசேகர். இவர் கடந்த ஏப்ரல் மாதம் அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவரிடம் 27 விலை உயர்ந்த ஐபோன் மற்றும் 3 சாம்சங் செல்போன் உட்பட சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான செல்போன்களை பில் இல்லாமல் கொடுத்து விற்று தருமாறு கொடுத்துள்ளார். செல்போன்களை பெற்றுக் கொண்ட அரவிந்த் தலைமறைவானதை அடுத்து பாதிக்கப்பட்ட சந்திரசேகர் இதுகுறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அரவிந்தை கடந்த 5 மாதங்களாக தேடி வந்தனர். இந்த நிலையில் மும்பையில் பதுங்கி இருந்த அரவிந்தை, அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்