தேர்தல் களத்தை உலுக்கிய கடிதம்.. உண்மையில் ஈபிஎஸ்-க்கு சி.வி.சண்முகம் தான் எழுதியதா?

Update: 2024-04-18 02:43 GMT

#edappadipalanisamy #cvshanmugam #admk

தன் பெயரில் போலி அறிக்கை தயாரித்து வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் சார்பில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, சி.வி.சண்முகம் எழுதியதைப் போன்ற பொய்யான அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், விழுப்புரம் தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக பாக்கியராஜ் நிறுத்தப்பட்டதில், தனக்கு துளியும் விருப்பம் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

முற்றிலும் உண்மைக்கு புறம்பான கடிதத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்புவதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் வகையிலும், வரும் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்திலும் மர்மநபர்கள் செயல்பட்டு வருவதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்