3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காம வெறியன் - போக்சோ நீதிமன்றத்தின் சாட்டையடி தீர்ப்பு

Update: 2024-04-24 03:40 GMT

தஞ்சாவூரில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. பாப‌நாசம் பகுதியை சேர்ந்த ஷேக் முகமது மைதீன் என்பவர், 6 வயதுடைய 2 சிறுமிகள், 10 வயது சிறுமி என 3 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில், போக்சோ சட்டத்தில் ஷேக் முகமது மைதீன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த தஞ்சாவூர் சிறப்பு போக்சோ நீதிமன்றம், ஷேக் முகமது மைதீனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 9 ஆயிரம் ரூபாய் அபராத‌மும் விதித்து தீர்ப்பு வழங்கியது. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கும் பரிந்துரை செய்த‌து.

Tags:    

மேலும் செய்திகள்