இறந்தவரின் மூக்கை சேதப்படுத்திய எலி ? உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

Update: 2024-05-10 06:45 GMT

திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பெரும்பேடு கிராமத்தை சேர்ந்த ஜேசிபி ஓட்டுநர் குப்பன் என்பவர் குடும்ப தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் பொன்னேரி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. சடலத்தை சென்று பார்த்த உறவினர்கள், இறந்த குப்பனின் மூக்கை எலி சேதப்படுத்தியதாக கூறி சடலத்தை வாங்க மறுத்தனர். இறந்தவரின் உடலை அரசு மருத்துவமனை ஊழியர்கள் முறையாக பாதுகாக்கவில்லை என குற்றம்சாட்டிய நிலையில், போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பின் போராட்டம் வாப்பஸ் பெறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்