பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு? - வெளியான கடைசி நேர ட்விஸ்ட்

Update: 2024-04-18 12:15 GMT

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த பிறகு மீண்டும் பள்ளிகள் எப்போது துவங்குவது, அடுத்த கல்வி ஆண்டுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, நாளை மறுநாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. வெப்ப அலை ஜூன் 15 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் அடுத்த ஒரு சில தினங்களில் பள்ளிகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக விவாதிக்க நாளை மறுநாள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கடும் வெப்பம் காரணமாக பள்ளிகள் திறப்பை 10 நாட்கள் தள்ளி வைக்கலாமா உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இதில் ஆலோசிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்