திடீரென பற்றி எரிந்த தனியார் பேருந்து.. அலறியடித்து இறங்கிய பயணிகள்.. ராணிப்பேட்டை அருகே பரபரப்பு

Update: 2023-11-22 09:00 GMT

வாலாஜாபேட்டையில் தனியார் பேருந்தின் அடிப்பாகம் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணியில் இருந்து வேலூர் நோக்கி தனியார் பேருந்து சென்றபோது, வாலாஜாபேட்டை அருகே பேருந்தின் அடியில் உள்ள டீசல் ஹோல்சில் இருந்து கரும்புகை ஏற்பட்டு, திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனடியாக பேருந்தில் இருந்து பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பயணிகள் மற்றும் பேருந்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன

Tags:    

மேலும் செய்திகள்