ஆணையரின் முதல் கூட்டத்திலேயே எதிர்ப்பு! கவுன்சிலர்கள் வாக்குவாதம்-மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

Update: 2023-11-01 05:49 GMT

கரூர் மாநகராட்சி மாதாந்திர கூட்டத்தில் இருந்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வாடகை வசூலிப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், ஆணையரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பொறுப்பேற்ற பின், அவர் கலந்து கொண்ட முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்