அமைச்சர் பொன்முடி வழக்கில் அடுத்த திருப்பம்

Update: 2024-04-17 07:04 GMT

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு 23-வது சாட்சியாக ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரான சம்பத் என்பவர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது மாவட்ட குற்றப்பிரிவு அலுவலக உயர் அதிகாரிகள் வற்புறுத்தியதன்பேரில் தான் கோப்புகளில் கையெழுத்திட்டதாகவும், இவ்வழக்கிற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி பூர்ணிமா வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்