கல்லா பெட்டியில் பணம் திருடிய முதியவர் பணம் திருடும் பரபரப்பு சிசிடிவி

Update: 2023-11-22 05:43 GMT

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் வெற்றிலை பாக்கு கடைக்குள் முதியவர் ஒருவர், கல்லாப்பெட்டியில் பணம் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடையின் உரிமையாளர் ஹாஜி முகமது தமீம், பேருந்தில் வந்த வெற்றிலையை எடுக்க பேருந்து நிலையத்துக்குச் சென்ற நேரத்தில் கடைக்கு வந்த முதியவர், ஆள் இல்லாததை அறிந்து உள்ளே சென்று, கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியில் சென்று விட்டார். கடைக்குத் திரும்பி திரும்பி வந்த ஹாஜி முகமது, கல்லாப்பெட்டியில் பணம் இல்லாதது அதிர்ச்சி அடைந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, முதியவர் திருடிச் சென்றது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்