அலைகடலென கோவிலில் குவிந்த பக்தர்கள்..பக்தி பரவசத்தில் அலைமோதும் காவடிகள் | Thanthitv

Update: 2024-04-23 16:39 GMT

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் புத்தரச்சல் கிராமத்தில், 21 அடி உயரமுள்ள ஸ்வர்ண கால பைரவருக்கு திரிசூலம் சாற்றும் பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாகை எட்டுக்குடி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி உள்ளிட்டவைகளை எடுத்து வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்

கரூர் மாவட்டம் புகழூர் நானபரப்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்