சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு | CHENNAI HC

Update: 2024-04-20 12:12 GMT

ஜெய்பீம் படத்தின் உண்மை சம்பவத்தில் காவல் துறையினரின் அத்துமீறலால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு வழங்குவது குறித்த நிலைபாட்டை தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் துறையினரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட ராஜகண்ணுவின் உறவினர்களான தங்களுக்கு பொது சட்டப்படி இறுதி இழப்பீடு வழங்கக் கோரி, ராஜகண்ணுவின் சகோதரி மகன் குளஞ்சியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இறுதி இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும், சிறப்பு சட்டத்தின் கீழ் வீட்டுமனை, அரசு வேலை வழங்குவது குறித்த நிலைபாட்டை தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்