சென்னையை புரட்டும் கனமழை.. இந்த பகுதியில் ஜாக்கிரதை!

Update: 2023-08-20 03:10 GMT

சென்னை புறநகர் பகுதிகளில், கனமழை கொட்டித் தீர்த்தது. கோயம்பேடு, மதுரவாயல், போரூர், ராமாபுரம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்துக்கும் மேலாக, கனமழை பெய்தது. இதனால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். காலை முதல் வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், இரவு நேரத்தில் பெய்த மழையால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்