தேசிய பத்திரிகை நாள் முதல்வர் வாழ்த்து

Update: 2023-11-16 15:57 GMT

தேசிய பத்திரிகை நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மையான ஊடகவியலே துடிப்பான மக்களாட்சியின் கண்காணிப்பாளர்! எனவே, தேசிய பத்திரிகை நாளில், ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம் என குறிப்பிட்டுள்ளார். அரசியல் அழுத்தங்களுக்கு சிலர் அடிபணியும் இக்காலத்தில், சாய்வற்ற நேர்மையான ஊடகவியலை முன்னெடுத்து, சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்