கண்முன்னே மதுபோதையில்..தாயை கொடுமை படுத்திய தந்தை..கோபத்தில் மகன் எடுத்த கொடூர முடிவு அதிர்ந்து

Update: 2024-04-18 07:59 GMT

#thanthitv #ranipet #attack #fatherandson #drunk

கண்முன்னே மதுபோதையில்

தாயை கொடுமை படுத்திய தந்தை

கோபத்தில் மகன் எடுத்த கொடூர முடிவு

அதிர்ந்து போன போலீசார்

ராணிப்பேட்டையில், மதுபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையை, மூங்கில் கொம்பால் தாக்கிக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். ஆற்காட்டை சேர்ந்த வேலு என்பவர், மதுபோதையில் மனைவி சாந்தியிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகன் ஹேமபிரசாந்த், வீட்டில் கீழே கிடந்த மூங்கில் கொம்பை எடுத்து, தனது தந்தையை தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த வேலுவை, மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் அவர், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹேமபிரசாந்தை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்