ஓசியில் சிக்கன் ரைஸ் கேட்டு தகராறு செய்ததாக புகார் - பாமக நிர்வாகியை கைது

Update: 2024-04-26 06:56 GMT

கடலூர் மாவட்டம் புவனகிரி பங்களா அருகே ஓசியில் சிக்கன் ரைஸ் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக பாமக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் சாலையில் ஜாகிர் உசேன் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு வந்த புவனகிரி பாமக கிழக்கு ஒன்றிய செயலாளர் சுருளிராஜன் ஓசியில் சிக்கன் ரைஸ், நூடுல்ஸ் கேட்டு தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் புவனகிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சுருளிராஜன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்....

Tags:    

மேலும் செய்திகள்