குப்பைத்தொட்டியில் தொப்புகள் கொடியுடன் குழந்தை - போலீசார் தீவிர விசாரணை

Update: 2024-02-26 02:16 GMT

பள்ளிக்கரணை துலுக்காணத்தம்மன் கோவில் தெருவில், 5-க்கும் மேற்பட்ட மாநகராட்சி குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற வந்தபோது, ஒரு தொட்டியில் தொப்புகள் கொடியுடன் பெண் குழந்தை இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த பள்ளிகரணை போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குறை மாதத்தில் பிறந்த அந்த குழந்தையை அங்கு வீசிச் சென்றது யார் என்பது குறித்து சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்