நடு ரோட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ரவுடி.. சென்னையில் குலை நடுங்க வைத்த கொலை

Update: 2024-05-27 06:32 GMT

வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் நேற்றிரவு எம்.ஆர். நாயுடு இரண்டாவது தெருவில் சென்று கொண்டிருந்த போது, அவரை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது. ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் இருந்த உதயகுமாரை மீட்ட அக்கம்பக்கத்தினர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு ரஞ்சித் என்கிற டபுள் ரஞ்சித் என்ற ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில், உதயகுமார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற நோக்கில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்