சென்னையில் நடந்த அதிர்ச்சி..இரவு 12 மணிக்கு ஒன்றுகூடிய மக்கள் - தலைக்கேறிய போதையால் நடந்த விபரீதம்

Update: 2024-04-07 03:13 GMT

சென்னை, அண்ணா சாலையில் மதுபோதையில் காரை இயக்கிய நபரால் விபத்து ஏற்பட்டது... நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அண்ணா சாலையில் இருந்து ஜெமினி மேம்பாலத்தை நோக்கி சென்ற சொகுசு காரை, அதன் ஓட்டுநர் மதுபோதையில் இயக்கியுள்ளார். இதனால், கதீட்ரல் சாலையில் இருந்து வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும், காரில் பயணித்தவர்கள் காயங்களின்றி உயிர் தப்பிய நிலையில், மதுபோதையில் கார் ஓட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்