வெளிநாட்டில் பணிபுரியும் கணவர்...மகனுடன் வசித்து வந்த பெண் காவலாளி - பெண் எடுத்த விபரீத முடிவு..

Update: 2024-03-28 17:42 GMT

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கோண்டூர் பகுதியை சேர்ந்தவர் சத்யகலா. கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த இவருக்கு, திருமணமாகி மகன் உள்ள நிலையில், கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில், அரியலூர் காட்டகரம் கீழத்தெருவில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்த சத்யகலா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், குடும்ப பிரச்சினையில் காவலர் தற்கொலை செய்துகொண்டாரா அல்ல பணிச்சுமை காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்